Monday, May 2, 2016

திருமுகம் நெஞ்சில்...

திருமுகம் நெஞ்சில் ஒளிவிடும் நேரம்
வருந்துயர் யாவும் பயங்கொண்டு ஓடும்
(திருமுகம்)

கனிந்து கனிந்துருகி மனமுன்னை நாடும்
குழைந்து குழைந்து உந்தன் பாதமே தேடும்
(திருமுகம்)

சிவபத்தினி உந்தன் நாமங்கள் கூறும்
உமைஉந்தன் திருப்புகழ் தினந்தினம் பாடும்
இருவினை களையும் கருவிழி பொழியும்
கருணையில் அமிழ்ந்து ஆனந்தம் காணும்
(திருமுகம்)




--கவிநயா








No comments:

Post a Comment