Monday, May 9, 2016

திருநாள் என்றோ?

என்னுயிரே உன்னைச் சேரும் திருநாள் என்றோ?
உயிரில்லா உடலாய் நான் இருப்பதும் நன்றோ?
கருவிழியே உன்னைச் சேரும் திருநாள் என்றோ?
ஒளியில்லா விழியாய் நான் இருப்பதும் நன்றோ?

உன்னை எண்ணி நாளும்… உருகுகிறேன் நானும்…
கன்னத்திலே கண்ணீரும் போடுதம்மா கோலம்…
அறியாயோ எனை அலைக்கும் வேதனைகள் யாவும்…
பரியாயோ பெற்றெடுத்த தாயன்றோ நீயும்?

கானல் நீரின் மூலம் எந்தன் தாகம் தீருமோ?
கற்பனையில் உன்னைக் கண்டால் ஏக்கம் தணியுமோ?
மாயை கண்ணை மறைக்கும் போது மயக்கம் நீங்குமோ?
மங்கை உந்தன் அருளில்லாமல் தெளிவும் பிறக்குமோ?


--கவிநயா 



No comments:

Post a Comment