Monday, December 19, 2016

உன்னனயன்றி வேறெவரை நானறிவேன்?



கீதாம்மாவின் குழையும் குரலில், ரேவதி ராகத்தில்

உன்னனயன்றி வேறெவரை நானறிவேன்? உந்தன்
அன்பையன்றி வேறெதையும் நானறியேன் – அம்மா
(உன்னையன்றி)

உலகில் உள்ள உறவுகள் எல்லாம் உந்தன் வடிவே, என்றும்
ஓருறவாய் இருப்பவள் நீயே உண்மை அதுவே
உன்னை எண்ணி வாழும் போதில் துன்பங்கள் இல்லை, உன்னை
ஒரு நொடியே மறந்த போதும் பெருகுது தொல்லை
(உன்னையன்றி)

கண்ணிரண்டில் கண்ணீர் பூக்கக் காரணமில்லை, எந்தன்
காவலாக நீயிருக்க, குறையொன்றும் இல்லை
உந்தன் பேரைச் சொல்லும் பேறை நீ தந்த வேளை, உன்னைப்
போற்றிப் புகழைப் பாடுவதேதான் தினமெந்தன் வேலை
(உன்னையன்றி)



--கவிநயா



No comments:

Post a Comment