Monday, December 5, 2016

சிந்தையெல்லாம் உந்தன் திருமுகமே!



கீதாம்மாவின் தேனினிய குரலில், ஹம்ஸானந்தம் ராகத்தில்

சிந்தையெல்லாம் உந்தன் திருமுகமே

வந்தனை செய்து வணங்குதென் மனமே

(சிந்தை)



மந்திரமெல்லாம் உன் திருப் பெயரே

விந்தைகள் செய்யும் உந்தன் திருவருளே

(சிந்தை)



வாடா புது மலராம் வஞ்சியுன் எழில் வதனம்

காடாம் என் மனதில் முழு நிலவாய் ஒளிரும்

மாறா மணம் வீசும் மங்கையுன் திருப்புகழை

ஓயாமல் பாடும் பணியே அருள்வாயே

(சிந்தை)


--கவிநயா 


No comments:

Post a Comment