Tuesday, January 3, 2017

உன்னையன்றி கதியேது?

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துகள்! அன்னையீன் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!


கீதாம்மாவின் உருக்கும் குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உன்னையன்றி கதியேது உமையவளே, உந்தன்
பதமன்றி புகலேது இமவான் திருமகளே
(உன்னையன்றி)

விதி செய்யும் விளையாட்டில் மதி கலங்கி மயங்கி
நாதியற்று இவ்வுலகில் நலிந் துழலும் எனக்கு
(உன்னையன்றி)

விண்ணிலொரு மதி போல எண்ணந்தனில் நீ ஒளிர்வாய்
பண்ணுகின்ற தமிழ்ப் பாட்டில் பண்ணின் மணியாய் வருவாய்
உன் நினைவில் ஆழுதற்கு உமையவளே அருள்வாய்
என் நினைவில் வாழுதற்கு இக்கணமே வருவாய்
(உன்னையன்றி)




--கவிநயா

No comments:

Post a Comment