Tuesday, June 13, 2017

அடைக்கலம் நீயே!

உன்னை விட்டால் யாரெனக்கு உமையவளே, பூம்
பாதத்தில் நிழலெனக்கு தருபவளே
(உன்னை)

உன்னைத்தான் பாடுகிறேன்; உன்னருளைத் தேடுகிறேன்
உன்னைத்தினம் நாடுகிறேன், பாராயோ?
திருவாயால் ஒருவார்த்தை கூறாயோ?
(உன்னை)

பழவினையின் பாரம் உயிரை அழுத்துது
விழிவழி நீர்அதனைக் கரைத்திடத் துடிக்குது
சிறகில்லாப் பறவையாய் மனம்மிகத் தவிக்குது
உன்பதநிழலொன்றே அடைக்கலம் என்குது
(உன்னை)


--கவிநயா 

No comments:

Post a Comment