Monday, June 5, 2017

எப்போது தீரும்?



ஜோன்பூரி ராகத்தில் சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்,, உருக்கத்தில். மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆதரித்தால் தீருமோ, சம்ஹரித்தால் போகுமோ?

ஆறாத துயரமென்னைத் துரத்துதம்மா நியாயமோ?

(ஆதரித்தால்)



உலகம் ஏழுமே பெற்ற அன்னை உன்னை

அண்டிச் சரணடைந்தேன் ஏனிந்தத் தாமதமோ?

(ஆதரித்தால்)



திருவடிகள் பற்றிக் கொண்டேன் திருக்கடவூர் அபிராமி!

திக்கற்றுத் தவிக்கின்றேன் வழிவிடுவாய் சிவகாமி!

மீன் விழியால் என் திசையில் பார்த்திடுவாய் மீனாட்சி!

எந்தை மனம் பறித்த கண்ணை என்மேல் பதிப்பாய் காமாட்சி!

(ஆதரித்தால்)


--கவிநயா 


No comments:

Post a Comment