Monday, July 3, 2017

மறவாமல் காப்பாய்!



கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அலை பாயும் என் மனதில்
விளையாடும் அம்பிகையே
சிலையாக நில்லாமல்
துணையாய்நீ அருள் புரியேன்
(அலை பாயும்)

சிறை போலும் இப்பிறவி
போதும் போதுமென
சிந்தையிலே உன்னை வைத்தேன்
சிறை மீட்டு வாழ்வு தர
(அலை பாயும்)

மலை போல உன்னை நம்பி
உன் பாதம் பணிந்தேனை
மறவாமல் காப்பாயே
மறை போற்றும் திருத்தாயே!
(அலை பாயும்)


--கவிநயா 

No comments:

Post a Comment