Monday, July 10, 2017

ஆயிரம் நாமங்கள் கொண்டவள்!





சுப்பு தாத்தா வின் சிறப்பு விருந்து... மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆயிரமாயிரம் நாமங்கள் கொண்டாய் ஆதி பராசக்தி

பாயிரமாயிரம் பாடிட அருள்வாய் அன்பு மகாசக்தி

(ஆயிரம்)



அன்னை உன்னைத் தேடி வரும் உன் பிள்ளைகள் பலகோடி

உன்னருள் தேடி வந்தவருள்ளே நானொரு கடைக்கோடி

(ஆயிரம்)



எண்ணத்தில் உன்னைப் பதித்து விட்டாலே எதுவும் நலமாகும்

கிண்ணத்தில் ஊறும் மதுவைப் போலே வாழ்வும் சுகமாகும்

பண்ணில் உன்னைப் பாடி வந்தாலே தீரும் பெருந்துன்பம்

கண்ணில் வைத்து நெஞ்சில் துதித்தால் கிடைப்பது பேரின்பம்

(ஆயிரம்)


--கவிநயா 

No comments:

Post a Comment