Monday, February 26, 2018

திருவான்மியூர் அரசி



சுப்பு தாத்தா வின் இசையில், குரலில், ஆரபி ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

திருவான்மியூர் அரசி, திரிபுர சுந்தரி
மருந்தீஸ்வரர் மனைவி வினையெல்லாம் வந்தரி
(திரு)

தேவரும் மூவரும் தொழுதிட்ட வான்மியூர்
தேவாதி தேவனுடன் தேவி துணை நின்றவூர்
(திரு)

இருகரு விழிகளில் ததும்பிடும் அன்பினில்
உலகத் துயர் விலகும் நிம்மதி மனதினில்
திருமுகத்தில் தவழும் புன்னகை எழிலினில்
இதயம் தனை மறந்து லயிக்கும் உன் நினைவினில்
(திரு)

--கவிநயா

No comments:

Post a Comment