Monday, March 5, 2018

வா லலிதாம்பா!



சுப்பு தாத்தா வின் உருக்கமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

திருமியச்சூரில் திகழ்ந்திடும் தேவி ஸ்ரீ லலிதாம்பிகையே
வினைகளில் ஊறி வெந்திடும் எம்மைக் கா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)

ஸ்ரீசக்ரந்தன்னில் அமர்ந்திடும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையே
சின்மய வடிவே சிந்தையில் அமர வா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)

அலைமகள் கலைமகள் இருவரும் போற்றிடும் ஸ்ரீ  லலிதாம்பிகையே
அலைந்திடும் மனதின் அஞ்ஞானம் அகற்றிட வா லலிதாம்பிகையே
தேவரும் மூவரும் யாவரும் வணங்கிடும் ஸ்ரீ லலிதாம்பிகையே
தேடிடும் அன்பரின் இதயத்தில் வாழ்ந்திட வா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)


--கவிநயா

No comments:

Post a Comment