Tuesday, July 3, 2018

அபிராமி! அருள்வாமி!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அபிராமியே! எமக்கு அருள்வாமியே!
சிவசாமி இடமிருக்கும் சிவகாமியே!
(அபிராமியே)

உன்னையென் துணையென
உள்ளத்தில் கொண்டு விட்டேன்
என்னைத் தள்ளி விடாதுந்தன்
பத நிழலில் வைப்பாய்
(அபிராமியே)

என்செயல் எண்ணியெண்ணி
உலகத்தில் உழலுகின்றேன்
உன்செயல் எண்ணாது
உள்ளம் நொந்து வாடுகின்றேன்

உன்னை எண்ணும் நாளும் என்றோ
உந்தன் பணி செய்வ தென்றோ
உன்னைப் பற்றிக் கொள்வ தென்றோ
உந்தன் பதம் சேர்வதென்றோ
(அபிராமியே)


--கவிநயா

No comments:

Post a Comment