Monday, December 3, 2018

ஒரு முறை பார்த்தால்...



ஒரு முறை முகம் பார்த்தால்
பழவினை பறந்தோடும்
திருப் பெயரைச் சொன்னால்
பெருந் துயரும் ஆறும்
(ஒரு)

அன்பு ததும்பும் வதனம்
அருள் ததும்பும் விழிகள்
இதழ் வழியும் முறுவல்
அபயம் தரும் பதங்கள்
(ஒரு)

சிந்தையில் அவள் முகமே
தினம் தினம் வந்தாடும்
சொந்தமென அவளை
நெஞ்சமும் கொண்டாடும்

தஞ்சமென அவள் பதமே
அடைந்து விட்ட போது
பஞ்சமென்று ஏதுமில்லை
அவள் புகழைப் பாடு!
(ஒரு)


--கவிநயா

No comments:

Post a Comment