Monday, February 10, 2020

மறவா நிலை தா!


உனை மறவாத நிலை வேண்டும்
உன் நினைவே என்றும் மனதினில் வேண்டும்
(உனை)

பழவினையால் துன்பக் கடலினில் உழன்றாலும்
உனதருளால் இன்ப வாழ்வினை அடைந்தாலும்
(உனை)

இமயத்திலே பிறந்த உமையவளே, எந்தை
இடத்தினிலே அமர்ந்த மலைமகளே
உதயத்திலே தோன்றும் ஒளியினைப் போலென்றன்
இதயத்திலே வந்து அருளிடுவாயே
(உனை)



--கவிநயா

No comments:

Post a Comment