Monday, February 17, 2020

உன்னை எண்ணி...



உன்னை எண்ணும் போது
இந்த உலகை மறக்கிறேன்
உந்தன் பாதம் பற்றி என்றன்
கவலை கடக்கிறேன்
(உன்னை)

தாமரைப் பூம் பாதம்
அதைப் பற்றிக் கொண்டால் போதும்
பிறவிப் பிணியைத் தீர்ப்பதற்கு
அதுவே மருந்தாகும்
(உன்னை)

கருவிழியால் கண நேரம் என்னைப் பார்க்க வேணும்
சிமிழ் போன்ற நாசி என்றன் திசையை நோக்க வேணும்
முறுவலிக்கும் சிறு இதழ்கள் சற்றே விரிய வேணும்
“கண்ணே உனக்கு நானிருக்கேன்”, என்றே சொல்ல வேணும்
(உன்னை)



--கவிநயா

No comments:

Post a Comment