Monday, August 17, 2020

வேண்டும்!

 

பற்று மிக வேண்டும், உன்றன்

பாதத்திலே வேண்டும்

பாசம் மிக வேண்டும், உன்றன்

நேசத்திலே வேண்டும்

 

சொந்தம் மிக வேண்டும், நீயென்

அன்னையென வேண்டும்

பந்தம் மிக வேண்டும், நானுன்

பிள்ளையென வேண்டும்

 

செல்வம் மிக வேண்டும், உன்றன்

பக்தியிலே வேண்டும்

கல்வி மிக வேண்டும், உன்றன் நாமம்

கற்பதிலே வேண்டும்

 

இன்பம் மிக வேண்டும், உன்னை

எண்ணுவதில் வேண்டும்

துன்பம் மிக வேண்டும், உன்னை

எண்ணா விட்டால் வேண்டும்

 

கண்ணீர் மிக வேண்டும், உன்னைக்

காணா விட்டால் வேண்டும்

பேரானந்தம் வேண்டும், உன்னைக்

காண்பதிலே வேண்டும்


--கவிநயா


1 comment: