Monday, August 24, 2020

உன் மணம்

 

மனமெல்லாம் அம்மா உன் மணம் வீசுதே

உளமெல்லாம் உன் புகழைத் தினம் பேசுதே

(மனமெல்லாம்)

 

நிலவெனும் உன் வதனம் நினைவினில் உலவிடும்

கருவிழிக் கருணையில் மனம் தினம் நனைந்திடும்

(மனமெல்லாம்)

 

வருவதும் போவதும் இல்லாமல் போகட்டும்

இன்பமும் துன்பமும் ஒன்றென ஆகட்டும்

நானெனும் அகங்காரம் உள்ளம் விட் டோடட்டும்

இருப்பதும் நிலைப்பதும் உன்நினை வாகட்டும்

(மனமெல்லாம்)


--கவிநயா


No comments:

Post a Comment