Monday, April 12, 2021

வேண்டும்

 

அன்பு மிக நிறைந்த மனம் வேண்டும்

அன்னையுன் திருவடி நிழல் வேண்டும்

சின்ன இதழில் குறு நகை வேண்டும்

உன்றன் அருட்பார்வை யென்றன் திசை வேண்டும்

(அன்பு)

 

சுவாசத்துடன் உன்நினைவே ஓட வேண்டும்

நெஞ்சத்தின் துடிப்பு உன்னைப் பாட வேண்டும்

எந்த நிலையிலும் உன்னை நாட வேண்டும்

உன்றன் அருளையே என்றும் தேட வேண்டும்

(அன்பு)

 

வந்தவினை வருவினை போக வேண்டும்

வெந்த மனம் உன் நினைவில் ஆற வேண்டும்

நெஞ்சம் உன்றன் கஞ்சப் பதம் தாங்க வேண்டும்

கொஞ்சு தமிழ் கொண்டு உன்னைப் போற்ற வேண்டும்

(அன்பு)



--கவிநயா


No comments:

Post a Comment