Monday, April 26, 2021

அடைக்கலம் நீயே

 

அடைக்கலம் நீயே அம்பிகையே

அருட்புனலே உன்றன் திருப்பதமே கதியே

(அடைக்கலம்)

 

கடை விழிப் பார்வை உடன் வர வேண்டும்

விழித் துணையே என்றன் வழித் துணையே

(அடைக்கலம்)

 

வினைச் சுமை தீர கடை நிலை சேர

கருத்தினில் வந்து நிலைப்பாயே, உன்றன்

அருட்கரம் தந்து காப்பாயே

 

மாயை என்னும் திரை மயக்கம் தரும் வேளை

தாயே என் மயக்கம் தீர்ப்பாயே

மாயே மடி யேந்தி காப்பாயே

(அடைக்கலம்)


--கவிநயா


No comments:

Post a Comment