Tuesday, May 25, 2021

தவமென்ன செய்தேனோ?

 

தவமென்ன செய்தேனோ தாயே

மனமெல்லாம் உனை வைத்து

தினமெல்லாம் உனைப் பாட

(தவமென்ன)

 

அழகு முகம் எண்ணி அரற்றுகிறேன்

அருள் வேண்டி அனுதினமும் பிதற்றுகிறேன்

அமுதெனும் உன் நாமம் பருகுகிறேன்

அன்னையுன் பதம் எண்ணி உருகுகிறேன்

(தவமென்ன)

 

குரல் கேட்டு வருவாயோ

பதம் சூடத் தருவாயோ

முகம் காட்டிச் சிரிப்பாயோ

அகம் குளிரச் செய்வாயோ

(தவமென்ன)


--கவிநயா


No comments:

Post a Comment