Monday, May 3, 2021

சிந்தையில்...

 

சிந்தையில் ஆடி வருவாய்... சிவகாமி

சிந்தையில் ஆடி வருவாய்

 

விந்தை விந்தை யென என்றனுள்ளம் மகிழ

எந்தைநட ராஜனுடன் எழில்மிகவே திகழ

(சிந்தை)

 

பொற்சிலம் பொலித்திட புன்னகை பொலிந்திட

சிற்றம்ப லத்தீசன் சிரித்துள்ளம் களித்திட

(சிந்தை)

 

இலயகதியோ டிணைந்து ஈசனுடன் அணைந்து

இசையுடனே இசைந்து நளினமுடன் அசைந்து

கார்கூந்தல் புரள கருவிழிகள் சுழல

நவரசமும் இழைய அபிநயத்தில் குழைய

(சிந்தை)


-- கவிநயா


No comments:

Post a Comment