Monday, March 7, 2022

நீயே உறவு


உறவென்று உன்னைக் கொண்டேன் தாயே

விரைவாக என்னைக் காண வாயேன்

(உறவென்று)

 

உனைக் காண ஏங்கும் பிள்ளை

உனை எண்ணிப் பாடும் கிள்ளை

 

முகம் காட்டத் தாமதமேனோ தாயே, என்றன்

அகம் காண மறுப்பதேனோ நீயே

(உறவென்று)

 

விதியாலே மயங்குகின்றேன்

தள்ளாடித் தயங்குகின்றேன்

 

துணையாக உன்னைக் கொண்டேன் தாயே

கரம் தந்து காக்க வேணும் நீயே

(உறவென்று)

 

--கவிநயா



No comments:

Post a Comment