Monday, March 14, 2022

மயிலிறகாய் வா


மயிலிறகாய் வருடிவிட வா அம்மா, என்

மனக் கவலை தீரும் உன்னால் தானம்மா

(மயிலிறகாய்)

 

ததியைப் போல உழலும் பிள்ளை பாரம்மா, இந்த

நதி கடலைச் சேர்வதென்றோ கூறம்மா

(மயிலிறகாய்)

 

பாதம் பற்றிக் கொண்டேன், என்

பற்றை நீக்க வருவாய்

கதறிக் கண்ணீர் வடித்தேன், என்

 பிறவி தீர்க்க வருவாய்

 

வேதவல்லி நீயே, என்

வேதம் உன்றன் பேரே

போற்றுவது உனையே, நிதம்

பாடுவதுன் புகழே

(மயிலிறகாய்)

 

--கவிநயா


No comments:

Post a Comment