Sunday, September 18, 2022

வர வேண்டும் தாயே

 

வர வேண்டும் வர வேண்டும் தாயே, அருள்

தர வேண்டும் தர வேண்டும் நீயே

(வர)

வரம் வேண்டும் வரம் வேண்டும் தாயே

நிலையாக என்மனதில் நின்றிடவே நீயே

(வர)

 

ஒரு பார்வை பார்க்க வேண்டும்

ஒரு வார்த்தை பேச வேண்டும்

கண்ணே என்றணைக்க வேண்டும்

கனிவாய்ப் புன்னகைக்க வேண்டும்

வாழ்வெல்லாம் உன்றன் நிழலில்

வாழ்ந்திட நீ அருளிட வேண்டும்

(வர)

 

--கவிநயா


No comments:

Post a Comment