Monday, January 6, 2014

உதிரமெல்லம் ஓடுகின்ற உமையவளே!

உதிரமெல்லாம் ஓடுகின்ற உமையவளே, என்
அதரத்திலுன் பெயரை வைத்தேன் இமையவளே
இமயத்திலே பிறந்து வந்த மலைமகளே, உன்னை
இதயத்திலே இருத்தி வைத்தேன் இனியவளே!

வேலெடுத்து நின்ற பிள்ளை வேலவனாம், உன்
காவலுக்கு நின்ற பிள்ளை கணபதியாம்
பால் கொடுத்த செல்லப் பிள்ளை சம்பந்தனாம், நீ
உயிர் கொடுத்த அன்புப் பிள்ளை மன்மதனாம்!

பாட்டெடுத்துப் பாடும் பிள்ளை பாரம்மா, அதைக்
கேட்டு மகிழ நீ வந்தால் என்னம்மா?
கேட்டதெல்லாம் அள்ளித் தரும் தாயம்மா, நான்
கேட்காமல் நீயே வந்தால் என்னம்மா?

--கவிநயா

1 comment: