Friday, January 31, 2014

ஆறுதல் கூறம்மா !


ஆறுதல் கூறம்மா !

குறைமதியை  மலராகச் 
திருச்சிரத்தில்  தரித்தவளே!
குறைமதியேன்  குறைதனை நீ  தீராயோ?
மறலிவருங்காலும் மனம் 
'உனைக்காணல் உறுதி' என்றே 

அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?


பிறைசூடும்  பித்தனையே
பதியாக வரித்தவளே!
திரைநீக்கித் திருக்காட்சி  தாராயோ ?
முறையற்றுத்  தரிகெட்டுத் 
திரிந்தாடும்  என் மனத்தின் 
மருள் மாய்க்கும் மருந்தாய்  நீ மாறாயோ 
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?



கறைக்கண்டன்  காயத்திலே
சரிபாதி பறித்தவளே !
நிறைகருணைக்  கண்ணாலே பாராயோ?
 முறையீடு முடிந்ததம்மா  ,
அ(ரு)ம்புமலர்க் கரத்தவளே !
விரைந்தென்னை  ஆட்கொள்ள வாராயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?














1 comment:

  1. அருமை...

    அன்னையின் கருணையே நமக்கு ஆறுதல்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete