Monday, January 20, 2014

சின்னக் கருங்குயில் கூவாயோ?



குயில்களை எல்லாம் கூட்டி வந்து கூவவிட்டு, சுப்பு தாத்தா பாடியிருப்பதை நீங்களும் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



சின்னக் கருங்குயில் கூவாயோ?
சிந்தை மகிழ்ந்திட கூவாயோ?
வண்ண மலர்ப் பாதம் கொண்ட எழில்அன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

கன்னங் கருங்குயில் கூவாயோ?
காற்றும் களித்திட கூவாயோ?
கன்றின் குரல் கேட்ட ஆவினைப் போலன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

செல்லக் கருங்குயில் கூவாயோ?
சேதி ஒன்றுசொல்ல கூவாயோ?
வாதை யினைத் தீர்க்க வாஞ்சையுடன் அன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

அம்மா என்றுநீயும் கூவாயோ?
ஆசை மிகுந்திடக் கூவாயோ?
அன்பே வடிவாக கொண்ட அன்னை இன்றே
வந்திடுவாள் என்றே கூவாயோ?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0806nkn_nature.php

2 comments:

  1. ஆகா... ரசிக்க வைக்கும் கவிதை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே பிடிச்சது :) நன்றி தனபாலன்!

      Delete