Monday, November 10, 2014

விந்தை என்னம்மா?

என் அம்மா என் அம்மா...
எந்தன் கண்ணம்மா

உன்னைக் காண ஓடி வந்தேன் எந்தன் கண்ணம்மா  – நீ
எங்கே சென்று ஒளிந்து கொண்டாயோ கொஞ்சம் சொல்லம்மா

கண்ணாமூச்சி ஆடும் நேரம் இதுவோ சொல்லம்மா  - உன்னைக்
காண ஏங்கும் எந்தன் கண்ணின் முன்னே வா அம்மா

அறிவில்லாமல் என்னைப் படைத்தாய் ஏனோ நீயம்மா  - இனி
எனைஅலைக்கழித்தல் தகுமோ முறையோ நீயே சொல்லம்மா

நிதமும் உந்தன் பேரைச் சொன்னால் ஊழ்வினை அழியுதம்மா  - எந்தன்
நெஞ்சம் வருத்தும் துன்பம் யாவும் பொடிப் பொடியாகுதம்மா

உந்தன் பாதம் தொட்டுப் பார்க்க இதயம் ஏங்குதம்மா  - அம்மா
உன்மடிதனிலே அடைக்கலமாக  மார்க்கம் தேடுதம்மா

எங்கும் எதிலும் இருப்பவள் நீயே எந்தன் கண்ணம்மா  - ஆனால்
என்கண்ணில் மட்டும் நீ படவில்லை, விந்தை என்னம்மா?

(என் அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment