Monday, November 17, 2014

அம்மா வருவாயோ?


ஹிந்தோளம் ராகத்தில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


 
கன்னத்தில் நீர்வழிய 
கன்னி உன்னைத் தேடுகிறேன்
எண்ணத்தில் உன்னை நிறுத்தி 
ஏக்கத்துடன் பாடுகிறேன்

தாயுன்னைத் தேடுகிறேன்
தட்டுத்தடுமாறுகிறேன்
தாங்கிக் கொள்ள யாருமில்லை
தத்தளித்து வாடுகிறேன்
(கன்னத்தில்)

கண்ணிருந்தும் ஒளி இழந்தேன்
காதிருந்தும் ஒலி மறந்தேன்
உன்னருமை தெரிந்திருந்தும்
ஊழ்வினையால் உழலுகிறேன்

அன்னை நீவருவாயோ
ஆறுதல் தருவாயோ
பிள்ளை என்னை ஏக்கத்திலே
பேதலிக்க விடுவாயோ
(கன்னத்தில்)

--கவிநயா

No comments:

Post a Comment