![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifwU_kwG2A0AmzfJRgJp62puDJhxdgtfnyqdjh5hY1x78JHjf9R6FpJZYihHTxIqANYILrXUYFbx6Rhm9oz_i10pgHnO1vgheHJz7-ZHzv-1j-KQClUylnD-eNQ0UdWH-1UyYOjOX5WzU/s320/20-samayapuram-mariamman-600-450.jpg)
வா தாயி !
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
தாழிவெண்ணைத் திருடும் ஆயன்தங்கச்சி!
கூழு படச்சிக் கும்பிடுவோம் பூசவச்சி !
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
பஞ்சுக்காலு பட்ட இடம் பசுமையாகணும்;
புஞ்சைகூட பொன்னு வெளையும்பூமியாகணும்;
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
பஞ்சமெல்லாம்போயி ஏழநெஞ்சு குளிரணும்;
தஞ்சமுன்னு வந்தோம்.நீயி கண்ணத்தொறக்கணும்.
ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி ஏழவாசல் காலவச்சி!
No comments:
Post a Comment