Monday, August 24, 2015

எண்ணமெல்லாம் நீயே...

எண்ணமெல்லாம் நீயே
எந்தன் திருத் தாயே
பின்னமில்லா உள்ளம்
தந்தெம்மைக் காப்பாயே
(எண்ணமெல்லாம்)

உன்னை எண்ணும் போதில்
வலி மறக்கும்
உன்னை எண்ண எண்ண
வழி பிறக்கும்
(எண்ணமெல்லாம்)

வண்ண மலர்கள் உன்னை அலங்கரிக்க
வண்ணத் தமிழ்ப் பாடல் உன்னைப் போற்றித் துதிக்க
சின்ன உள்ளம் அன்னை நீ குடியிருக்க, எந்தன்
சென்னி உண்டு உந்தன் திருப்பதம் பதிக்க
(எண்ணமெல்லாம்)


-- கவிநயா

3 comments:

  1. எந்தன் சென்னி உண்டு உந்தன் திருப்பதம் பதிக்க

    ReplyDelete
  2. "சின்ன உள்ளம் அன்னை நீ குடியிருக்க, எந்தன்
    சென்னி உண்டு உந்தன் திருப்பதம் பதிக்க"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
  3. மிக்க நன்றி லலிதாம்மா, ஷைலன்.

    ReplyDelete