Monday, August 31, 2015

நீயே என் உறவு

உறவென்று உனைக் கொண்டேன் உமையவளே – வேறு
எவரிடத்தில் சொல்வேன் என் குறைகளையே?
(உறவென்று)

மனமென்னும் குரங்கின் கை அகப்பட்டேன் - எந்தன்
மதி செய்யும் சதி வலையில் சிறைப்பட்டேன்
கதி என்று உனை அடைந்தேன் நானம்மா - என்னைச்
சிறை மீட்டு அருள் செய்வாய் நீயம்மா
(உறவென்று)

உன்னைத் தானே எண்ணி எண்ணி வாழுகிறேன்
உந்தன் புகழ்தானே தினந் தினமும் பாடுகிறேன்
கண்ணீர் சிந்தும் பிள்ளை பாராம்மா, என்மேல்
கருணை உனக்கேன் இன்னும் இல்லையம்மா?
(உறவென்று)


--கவிநயா 

 

No comments:

Post a Comment