Monday, November 23, 2015

அம்மா உன் காலடியே...


சுப்பு தாத்தாவுடைய தாயாரின் நினைவு நாளாம்... அம்மாவை நினைத்து அருமையுடன் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!



அம்மா உன் காலடியே
         நான் வாழும் குடிலாகும்
அம்மா உன் திருநாமம்
        என் னுயிருக் குணவாகும்
அம்மா உனை நம்பி விட்டால்
       குறையெல்லாம் நிறையாகும்
அம்மா உனைப் பணிவதுவே
      பிறவியிதன் பயனாகும்
அம்மா உனை அண்டி வந்தேன்
      அபயம் உந்தன் பதமாகும்
அம்மா உன்னைப் பாடுவதே
     என் வாழ்வின் தொழிலாகும்
அம்மா உனை எண்ணி விட்டால்
    உள்ளம் விரிந்த பூவாகும்
அம்மா நீ பரிந்து விட்டால்
     உலக வாழ்வும் சுகமாகும்


--வியா
 

No comments:

Post a Comment