Monday, November 30, 2015

என் தேனே!

 
அருள் மழை பொழிந்திட வருவாயே
மருள் தரும் இருள் நீக்கி அருள்வாயே
(அருள்)

ஒரு மனதா யுன்னைப் பணிகின்றேன்
இரு விழியால் என்னைப் பாராயோ
(அருள்)

சிறகென உனதன்பைக் கொண்டேனே
உறவெது உனையன்றி என்றேனே
கனவிலும் நனவிலும் என் தேனே
உனை எண்ணிக் களி மிகக் கொண்டேனே
(அருள்)


--கவிநயா 


No comments:

Post a Comment