Monday, December 21, 2015

நலியாதெனை நீ காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 1








தணியாத் துயரம் எனைத் தீய்க்க
தனியா யுழன்று புலம்புகிறேன்
தாயே நீயும் அறியாயோ?
துயரம் தீர்க்க வாராயோ?
பிழைகள் பலவும் செய்தாலும்
பிள்ளை என்மேல் இரங்காயோ?
நாயேன் எனவே ஆனாலும்
நலியாதெனை நீ காவாயோ?


--கவிநயா


(தொடரும்)

No comments:

Post a Comment