Monday, December 28, 2015

கோலக் கிளியே காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 2




கானம் போலக் காரிருளில்
கலங்கித் தனியாய்த் தவிக்கின்றேன்
ஞாலம் எல்லாம் உனதருளால்
நலந்தரும் உன்னைக் கேட்கின்றேன்
காலம் எல்லாம் கடந்தவளே
சூலந் தாங்கிக் காப்பவளே
ஓலம் இட்டு அழைக்கின்றேன்
கோலக் கிளியே காவாயோ?

--கவிநயா 

(தொடரும்)

No comments:

Post a Comment