Monday, July 4, 2016

உன்னை நம்பி...



சுப்பு தாத்தாவின் இசையில் நாட்டைக் குறிஞ்சி ராகத்தீல் கீதா ரங்கன் அவர்கள் பாடியிருப்பது. மிக்க நன்றி தாத்தா, கீதாம்மா!



நாடுகின்றேனே நாயகியே

பாடுகின்றேனே பூவிழியே

தேடுகின்றேனே திருவடியே

வாடுகின்றேன் இன்னும் வரவில்லையே

(நாடுகின்றேனே)



பச்சை நிறத்தில் மீனாக்ஷி

அந்திச் சிவப்பில் காமாக்ஷி

கருமுகிலாக காளியம்மா

இயற்கையெல்லாம் உன் வண்ணமம்மா

(நாடுகின்றேனே)



நறுமண மலர்களில் திரு வதனம்

முழுமதி எழிலிலும் உன் வதனம்

சிறுதுளி தேனினில் உன் இனிமை, பெருங் 
கடலையும் விஞ்சிடும் உன் கருணை

(நாடுகின்றேனே)



சோதனை கோடி வந்தாலும்

வேதனை அளவின்றித் தந்தாலும்

மாதுனை நம்பியே வாழ்கின்றேன்

மாதா உன்பதம் வீழ்கின்றேன்

(நாடுகின்றேனே)




--கவிநயா 


No comments:

Post a Comment