Monday, July 11, 2016

தேயாத மதி


வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
நேசத்திலே பூத்திருக்கும் என்னிதயம் உனக்காக
இதயத்திலே சின்னஞ் சிறு கோயில் வைத்தேன் உனக்காக
உதயமென நீயெழுந்து அதில் உதிப்பாய் அதற்காக

சோலைமலர்த் தேனே, என் சொக்கத் தங்கத் தாயே
பாலையிலே தவித்தாலும், பக்கத் துணை நீயே
வேலை வேலை என்றலையும் வேளையிலும் தாயே
மாலகற்றிக் கால்பிடிக்க அருள வேணும் நீயே

உள்ளமெனும் வானில் வந்து உலவுகின்ற தாயே
ஒரு நொடியும் தேயாத முழு நிலவு நீயே
தேடுகின்ற உண்மை உன்னை உணர்ந்திடவே  தாயே
தேயாத மதி எனக்கு அருள வேணும் நீயே



--கவிநயா


No comments:

Post a Comment