Monday, July 18, 2016

சோதனை ஏன்?


அமிர் கல்யாணி ராகத்தில், சுப்பு தாத்தாவின் இசையில், கீதாம்மா அவர்கள் மனமுருகப் பாடியிருப்பது... மிக்க நன்றி, சுப்பு தாத்தா, மற்றும் கீதாம்மா!



உன்னையன்றி ஒருவரையும்

நான் நம்புகிலேன் தாயே

உள்ளம் படுகின்ற வேதனையில்

மனம் வெம்புகிறேன் தாயே



அம்மா என நீ இருக்கையிலும்

சும்மா எனக்கேன் சோதனையோ?

விழிநீர் ஆறாய் வழிகையிலும்

வேடிக்கை பார்ப்பதுன் வாடிக்கையோ?

(உன்னை)



பிள்ளை மனந்தான் பித்தாச்சு, இங்கு

அன்னையுன் மனமோ கல்லாச்சு

உலகின் வழக்கம் மாறியதோ, இல்லை

மனதின் மயக்கம் கூடியதோ?

(உன்னை)


--கவிநயா

No comments:

Post a Comment