Monday, October 24, 2016

தேவி நின் திருவடிகள் போற்றுகின்றேன்!



கீதாம்மாவின் இனிய குரலில் மிக்க நன்றி கீதாம்மா! 

தேவி நின் திருவடிகள் 
போற்றுகின்றேன்

தேவாதி தேவரெல்லாம் 
பதம் பணிந்தேத்தும் எந்தன்

(தேவி)



மூவருக்கும் முதல்வி

வேதங்களின் தலைவி

நாளும் தொழுபவர்க்கு

நலம் புரியும் துணைவி

(தேவி)



சித்தமெல்லாம் என்றும்

சிவை மயமே

சக்தி உந்தன் துணை இருக்க

இனி எனக்கேன் பயமே?

(தேவி)

பக்தி என்னும் பணிவைத்

தந்தருள்வாய்

பித்தனுடன் விடையேறி

வந்தருள்வாய், அம்மா

(தேவி)



--கவிநயா 

No comments:

Post a Comment