![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg44pnWYaKWiayC5XKW9dQuuBJFZhYKvfbwy0V0zpu4Mfi6quyO-bNXJ0J2N5NsFVQteTmiJWCRCJs9yGG-fs9Ir5NmvNB7v5TPNla50-HqtmZWbdLoV4k04gDVmj7qUEvVMzZH1KjcsA/s400/Sarasvati.jpg)
வாணியை வேண்டுதல்
(பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்து கிடைத்த
சரஸ்வதி துதி )
தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பல
காட்டல் ,கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்
நீ அருளும் தொழில்களன்றோ ?
ஒளிவளருந்தமிழ்வாணீ !அடியநேற்
கிவையனைத்தும் உதவுவாயே.
No comments:
Post a Comment