Monday, November 14, 2016

நாளும் உன்னை நினைக்க வேண்டும்



கீதாம்மாவின் இனிய குரலில், இசையில் 

நாளும் உன்னை நினைக்க வேண்டும்

நாயகியே துதிக்க வேண்டும்

காணும் பொருள் யாவினிலும்

கனிமுகமே காண வேண்டும்

(நாளும்)



சோதனைகள் வந்தாலும்

சோகத்திற்கு வேலையில்லை

வேதனைகள் தீர்த்திட என்

தாயென் னருகில் இருக்கையிலே

(நாளும்)



சஞ்சலங்கள் கொண்ட போதும்

செவ்வடிகள் பற்றிக் கொண்டால்

அஞ்சலென்று சொல்லிடுவாய்

அன்புடனே காத்திடுவாய்



பஞ்சு மலர்ப் பாதங்களை

பக்தியுடன் பற்றிக் கொண்டால்

அஞ்சலென்று சொல்லிடுவாய்

அரவணைத்துக் காத்திடுவாய்

(நாளும்)


--கவிநயா 

No comments:

Post a Comment