Monday, November 28, 2016

என் மனத் தேரினில்...



கீதாம்மாவின் குழையும் குரலில், ரஞ்சனி ராகத்தில். மிக்க நன்றி அம்மா! 

என் மனத் தேரினில் உன் நாமம்

ஊர்வலம் போகுது எந்நாளும்

(என் மனத் தேரினில்)



சிந்தையிலே தித்திக்கின்ற தேனூறும்

எந்தையுடன் உந்தனையே எண்ணுந் தோறும்

(என் மனத் தேரினில்)



கருவிழிக் கடலினில் கருணை பொங்கும், அதில்

இருவினைகளும் எமை நெருங்க அஞ்சும்

சுகம் எது எது என அலையும் நெஞ்சம்

அலைந்த பின் உன்னிடத்தில் அடையும் தஞ்சம்

(என் மனத் தேரினில்)


--கவிநயா 

No comments:

Post a Comment