Monday, November 7, 2016

மனமெல்லாம்...



கீதாமாவின் மனதை உருக்கும் குரலில், இசையில்

மனமெல்லாம் உன்னை

மணக்க வைத்தாய்

தினம் என் நாவை உன்னைத்

துதிக்க வைத்தாய்

(மனமெல்லாம்)



விஞ்சும் நிலவெழில் வதனம்

மன வானில் தவழும்

கொஞ்சும் வண்ணத் தமிழதனை

எண்ணி எண்ணிப் புகழும்

(மனமெல்லாம்)



அன்னை உந்தன் நாமம்

எந்தன் நெஞ்சில் ஊறும்

அன்புச் சுனையில் தோயும்

அமுதெனவே பாயும்

(மனமெல்லாம்)



எந்தன் நெஞ்சம் என்றும்

உன் நினைவில் ஒன்றும்

ஆவின் இளங் கன்றாய்

உந்தன் மடியில் துஞ்சும்

(மனமெல்லாம்)


--கவிநயா 


No comments:

Post a Comment