Monday, October 23, 2017

மலர்களெல்லாம் உனக்காக!




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

மலர்களெல்லாம் உனக்காக

மகளின் மனம் உனக்காக
பொதிகைத் தென்றல் உனக்காக
பொங்கும் அன்பு உனக்காக
(மலர்கள்)

கால்களாலே நடப்பதெல்லாம்
கண்மணி உன்னை வலம்வரவே
கைகள் செய்யும் செயல்கள் யாவும்
அன்னை உன்னைத் தொழுதிடவே
(மலர்கள்)

நா உரைக்கும் சொற்களெல்லாம்
நங்கை உந்தன் நாமமாகும்
பாவில் ஊறும் சொற்களெல்லாம்
பாவையுன் புகழ் ஆரமாகும்

உடல் உன்னைப் பணிவதற்கே
உள்ளம் உன்னை நினைப்பதற்கே
மொழி உன்னைப் புகழ்வதற்கே
பிறவி உன்னை அடைவதற்கே
(மலர்கள்)


--கவிநயா
 

No comments:

Post a Comment