Monday, November 13, 2017

சின்னஞ்சிறு பெண் போலே



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என்னோடு வருவாயே அம்மா, உன்னைப்

பிள்ளையெனப் பாராட்டி, செல்லமெனச் சீராட்ட

(என்னோடு)



சிற்றாடை கட்டிக் கொண்டு சின்னஞ்சிறு பெண் போலே

முத்தாரம் மார்பசைய முல்லை மலர்ப் பூப் போலே

காலிரண்டில் கொலுசொலிக்க துள்ளும் புள்ளி மான் போலே

பால் நிலவைப் பழிக்கின்ற வட்ட எழில் வதனமுடன்

(என்னோடு)



ஒரு முறை உனை நினைந்தால் உலகெல்லாம் ஒளி மயமே

ஒரு கணம் உனை மறந்தால் உள்ளம் மூழ்கும் இருளிடமே

என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே

உன்னருகில் நான் இருந்தால் இப்பிறவி பயன் பெறுமே

(என்னோடு)


--கவிநயா


No comments:

Post a Comment