Monday, November 27, 2017

இன்பம் அவள் பாதம்



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகெல்லாம் அளந்தோனின் உடன்பிறந்தவளே
உத்தமியே உமையவளே சத்தியத்தின் வடிவே
(உலகெல்லாம்)

சின்னஞ்சிறு உயிருக்கும் உணவளிப்பவளே
பென்னம் பெரும் கடலெனவே கருணை செய்பவளே
(உலகெல்லாம்)

அம்மா வென்ற ழைத்து விட்டால் அள்ளி அணைத்துக் கொள்வாள்
கன்னத்திலே ஓடும் நீரை முந்தானையால் துடைத்திடுவாள்
துன்பம் இனி இல்லையென்னும் நம்பிக்கையை அவள் அளிப்பாள்
இன்பம் அவள் பாதம் என்று அன்பால் உணர்த்திடுவாள்
(உல்கெல்லாம்)


--கவிநயா


No comments:

Post a Comment