Monday, December 11, 2017

காலடியில்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

காலடியில் விழ வேணும், கண்ணீரால் தொழ வேணும்
பூவடியில் ஓர் மலராய் நானும் வந்து விட வேணும்
(காலடியில்)

இதயத்திலே ஈரமில்லை, துயரம் அதைத் துரத்தியதோ?
விழிகளிலே நீருமில்லை, வேதனையால் வற்றியதோ?
(காலடியில்)

உன்னை எண்ணும் போதினிலே உள்ளம் உருகி விட வேணும்
உன் பெயரைக் கேட்டாலும் கண்கள் பெருகி விட வேணும்
அன்பெல்லாம் உனக்காக, ஆசையெல்லாம் உனக்காக
சொந்தம் பந்தம் பாசம் என்ற அத்தைனையும் நீயாக

(காலடியில்)


--கவிநயா

No comments:

Post a Comment