Monday, December 4, 2017

நினையாத நாளில்லை


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

நினையாத நாளில்லையே, உன்னை
பணியாமல் நானில்லையே, அம்மா
(நினையாத)

அலையினில் சிக்கிய துரும்பாய் என் மனம்
உலகினில் சிக்கி உழல்கின்ற போதும்
(நினையாத)

முத்து முகம் நினைத்தால் சித்தத்தில் தேனூறும்
பத்தும் பறந்து விடும், பக்தி மிகுந்து வரும்
சக்தி உன் பெயர் சொன்னால் முத்தமிழ் பாலூறும்
பண்ணிசை ஓடி வரும் பாமழையாய்ப் பொழியும்

(நினையாத)


--கவிநயா


No comments:

Post a Comment