Monday, January 29, 2018

உன்னிலே என் எண்ணம் நிலைய





உன்னிலே என் எண்ணம் நிலைய 
அருள் கொடு..அன்னையே...
மண்ணிலே என் ஆவல் முடிய  
மனம் கொடு என் அன்னையே ...

...உன்னிலே..

இருள் எது ஒளி எது என் 
இதயம் வேண்டும் பொருள் எது ?
இனி இது அது என் நாடா நிற்கும் 
இதய வலிவு தந்திடு. 

......உன்னிலே...

பாலை நீரிலிருந்து பிரிக்கும் 
தந்திரமென்ன சொல்லிடு.  ..அலை 
பாயும் மனமும் பொய் தவிர்க்க 
மந்திரமும் தந்திடு. 

......உன்னிலே .....




1 comment:

  1. அன்பினிய தாத்தா, பாடல் மிகுந்த பொருள் நயத்துடன் அருமையாக இருக்கிறது. பாடியதையும் இணைத்து விடுங்களேன்...

    ReplyDelete